• Welcome to TamilsGuide
செய்திகள் 1

படுக்கைக்கு அழைத்த பிரபல நடிகர் - உண்மையை உடைத்த விசித்ரா 

சினிமா

பிக் பாஸ் 7ம் சீசனில் நடிகை விசித்ரா முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார். அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளியை தொடர்ந்து தற்போது பிக் பாஸிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார். இன்று பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அவர்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவத்தை பற்றி கூற வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.
  
விசித்ரா தான் ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ தன்னை பார்த்து பெயர் கூட கேட்காமல், 'இந்த படத்துல நடிக்கிற இல்ல நீ. ரூமுக்கு வா' என்று மட்டும் கூறி அழைத்திருக்கிறார்.

"அன்று இரவு ரூமுக்கு சென்று தூங்கிவிட்டேன். அப்போது இருந்து பல்வேறு சிக்கல்கள் கொடுத்தார்கள். சாயங்காலம் ஆனால் குடித்துவிட்டு அறையை வந்து தட்டுவார்கள். அதை எல்லாம் எப்படி சமாளிப்பது ஏன் வருத்தத்தில் இருந்தேன். அப்போது அந்த ஹோட்டல் மேனேஜர் ஆக இருந்தவர் தான் அறையை மாற்ற உதவி செய்தார். அந்த மேனேஜர் தான் இப்போது எனது கணவர்" என விசித்ரா கூறி இருக்கிறார்.

பாலியல் தொல்லை.. கன்னத்தில் அறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் அதன் பின் படத்தின் ஷூட்டிங் கிராமத்தில் நடக்கும்போது ஒரு காட்சியில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் என்னை தகாத முறையில் தடவினார். பல முறை அப்படி நடந்தது. இறுதியில் அந்த கையை நான் பிடித்துவிட்டேன். அவனை அழைத்து கொண்டு போய் ஸ்டாண்ட் மாஸ்டரிடம் கூறினால் அவர் என் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டார்.

அது பற்றி நான் சங்கத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் எனக்கு ஆதரவாக யாருமே வரவில்லை. அதையெல்லாம் விட்டுட்டு போய் வேலையை பாருமா.. என சங்க தலைவர் கூறியது எனக்கு இப்போது நினைவில் இருக்கிறது.

சங்கத்திற்கு எல்லாம் வராதீங்க, போய் போலீஸ்ல புகார் குடுங்க என வெளிப்படையாகவே சொன்னாங்க. இதற்கு பிறகு தான் சினிமா துறையே வேண்டாம் என விலகிவிட்டேன்.

இவ்வாறு விசித்ரா கண்ணீருடன் கூறி இருக்கிறார். 
 

Leave a Reply