• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருநங்கைகளுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ICC தடை

ஆண்களாக பிறந்து, மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடும் திருநங்கைகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ளது.

பெண் வீராங்கனைகளின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் டேனியல் மெக்கஹே உத்தியோகப்பூர்வமாக சர்வதேச விளையாட்டை விளையாடிய முதல் திருநங்கை கிரிக்கெட் வீரர் ஆனார்.

புதிய விதிமுறைகள் இரண்டு ஆண்டுகளுக்குள் மறுஆய்வு செய்யப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
 

Leave a Reply