• Welcome to TamilsGuide
செய்திகள் 1

A9 வீதியில் உள்ள 46 மரங்களை அகற்ற நடவடிக்கை

இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் A9 வீதியில் உள்ள ஆபத்தான 46 மரங்கள் முழுமையாக அகற்றும் பணி இன்று ஆம்பமானது.

குறித்த வீதியில் ஆபத்தானதாக 57 மரங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதில் 46 மரங்களை முழுமையாக அகற்றவும், 11 மரங்களின் ஆபத்தான கிளைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் குறித்த நடவடிக்கைக்கு போக்குவரத்து பொலிஸார், மின்சார சபையினர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபையினர் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply