• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிரிக்கெட்டுக்கு புதிய பிராண்டை அறிமுகப்படுத்துவதே நோக்கம்

இலங்கை

கிரிக்கெட் விளையாட்டை மீட்பதற்கு தன்னால் இயன்ற அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கிரிக்கட் மீது தான் கவனம் செலுத்துவதுடன், நிர்வாகம் குறித்து ஏனைய உறுப்பினர்கள் கவனித்துக் கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இலங்கை கிரிக்கெட்டுக்கு புதியபிராண்டை அறிமுகப்படுத்துவதே தமது நோக்கமாகும் எனவும் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிரிக்கெட்டை மிக விரைவில் மீண்டும் வெற்றிபெறும் நிலைக்கு கொண்டுவர வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply