• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐந்தாண்டுகளின் பின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை

இலங்கை

ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் தடைப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் 12வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த 30ஆம் திகதி முதல் நவம்பர் 1ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2016 மற்றும் 2018 க்கு இடையில் நடைபெற்ற 11 சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான பேச்சுக்கள் நிறுத்தப்பட்ட நிலையில் 12 சுற்று பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,
 

Leave a Reply