• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பணமோசடி வழக்கு - நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் விடுதலை

இலங்கை

கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்கில் இருந்து நாமல் ராஜபக்ஷ உட்பட அனைத்து பிரதிவாதிகளையும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு, குறித்த நிறுவனத்தின் ஊடாக நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் 30 மில்லியனை முறைகேடாக சம்பாதித்ததாக குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply