• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் வீதியை திருத்தித் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

இலங்கை

பண்டாரிக்குளம் பிரதான வீதியை திருத்தித் தருமாறு கோரி ஆர்ப்பாட்ட இன்று பேரணியொன்று பிரதேச மக்களினால் இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பிரதான வீதியானது நாடு முழுவதும் ஒரு லட்சம் கிலோமீற்றர் காபெட் வீதிகள் திட்டத்தின் கீழ் 2020ம் ஆண்டு உள்வாங்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த வீதிக்கு காப்பட் போடுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாத நிலையிலேயே பண்டாரிக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த எதிர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் முன்பாக ஆரம்பமான இந்த பேரணியானது பண்டாரிக்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் முன்பாக முடிவடைந்தது.
 

Leave a Reply