• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் ஆரம்பமான காரைநகர் – யாழ்ப்பாணம் பேருந்து சேவை

இலங்கை

பொதுமக்களின் நீண்ட நாள் போராட்டத்தின் பலனாக காரைநகரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான 785/1 என்ற பேருந்து சேவையானது மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த பேருந்து சேவையானது காரைநகரிலிருந்து பயணத்தைத்  தொடங்கி யாழ்ப்பாணம் சென்று மீண்டும் மதியம் 1.20 ற்கு யாழ்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து காரைநகரை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளாய் டச்சு வீதி ஆரம்பம் முதல் சித்தன்கேணி டச்சு வீதி முடிவு வரையான வீதி பகுதியில் வாழும் மக்களின் போக்குவரத்து வசதியினை இலகுபடுத்துவதே இப் பேருந்து வழித்தடத்தின் பிரதான நோக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply