• Welcome to TamilsGuide
செய்திகள் 1

18 வயதில் தொடங்கிய திருமண வாழ்க்கை....! அழகான பெண் குழந்தை.....

சினிமா

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகியாக வலம் வந்தவர் சுஜாதா மோகன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பழமொழிகளில் பல பாடல்களை பாடி இருக்கிறார்.

இதுவரை நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவரது பாடல் திறமைக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சுஜாதா மோகன் அவர்கள் 18 வயதில் 1981 ஆம் ஆண்டு கிருஷ்ணா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவர் ஒரு மருத்துவர். இவர்கள் இருவருக்கும் ஸ்வேதா மோகன் என்ற ஒரு மகள் இருக்கிறார். இவர் 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

சிறுவயதில் இருந்து இசையின் மீது அதிக ஆர்வம் இருந்த காரணத்தினால் இவரும் பாடல்களை முறையாக பயின்றார். தற்போது சினிமா உலகில் மிகப் பிரபலமான பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். ஸ்வேதா மோகனும் ஒரு பிரபலமான இந்திய பாடகி தான்.  

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பழமொழி திரைப்படங்களில் பாடி வருகிறார். 50க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் 10 வருடத்திற்கு மேலாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்று வருகிறார்.

சூப்பர் சிங்கர் தொடங்கிய காலகட்டத்தில் சுஜாதா தான் நடுவராக இருந்தார். அதன் பிறகு தற்போது ஸ்வேதா மோகன் நடுவராக இருக்கிறார். இவர் 2011 ஆம் ஆண்டு அஸ்வின் சாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரஷ்ஷா என்ற அழகான பெண் குழந்தை இருக்கின்றது.

சமூக வலைதளங்களில் ஸ்வேதா மற்றும் சுஜாதா இருவரும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்கள். இவர்கள் இருவரும் அவ்வப்போது தனது குடும்பமாக எடுக்கும் புகைப்படங்களை இணையதில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் பேசிய சுஜாதா கூறுகையில் எனக்கு இரண்டு முறை அபார்ஷன் ஆகியது. அதன் பிறகு பிறந்த மகள் தான் ஸ்வேதா.

அவர் பள்ளி படிக்கும் போதும், கல்லூரி படிக்கும் போதும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பெற்றோர்களாக எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்று ஸ்வேதா பலமுறை வருத்தப்பட்டு இருக்கிறார்.

ஆனால் அப்போதுதான் நான் என்னுடைய பாடும் தொழிலில் மிகவும் உழைப்பாக இருந்தேன். அந்த நேரங்களில் எங்களுடன் இருப்பதை என்னுடைய மகள் நினைத்து வருந்தி இருப்பார்.

அதற்கு இப்போது ஒன்றும் பண்ண முடியாது . அதையெல்லாம் ஈடு செய்யும் வகையில் தான் அவரது மகளை நான் பார்த்து வருகிறேன் என்று மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்திருந்தார் பாடகி சுஜாதா.

ஆறுமுகம் தாரமங்கலம் சேலம் 

Leave a Reply