• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காஸா சிறுவர் நிதியத்திற்கு 33 இலட்சம் அன்பளிப்பு

இலங்கை

காஸா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரியிடமிருந்து 33 இலட்சம் ரூபாய் அன்பளிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

காசா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபாயை அன்பளிப்புச் செய்துள்ள நிலையில் அதற்கான காசோலை நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான சரத் குமார மற்றும் மாவனல்லை சாஹிரா கல்லூரியின் அதிபர் ஏ.எச்.எம். நவூஷாட் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், கல்லூரியின் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர், பழைய மாணவர் சங்கத்தின் உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply