சீனக் கப்பலுக்கு மேலும் இரண்டு நாட்கள் தரித்திருக்க அனுமதி
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலான “ஷி யான் 6" மேலும் இரண்டு நாட்கள் துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கப்பல் நேற்று பிற்பகல் நாட்டிலிருந்து புறப்படவிருந்தது.
இந்தநிலையில், நாளை வரை குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆய்வுக் கப்பல் கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.