• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரே நேரத்தில் 5 பேருடன் உறவில் இருந்திருக்கிறேன் - அதிர்ச்சியை கிளப்பிய தீபிகா படுகோன்

சினிமா

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று ஒரு காலத்தில் பெண்கள் இருந்த நிலையில் இப்போது கணவர் இருக்கும் போதே வேறு ஆண்களுடன் உறவில் இருந்ததாக வெளிப்படையாக நடிகை ஒருவர் பேசி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். சினிமாவைப் பொறுத்தவரையில் நடிகைகளின் காதல் தோல்விகள் வெளிப்படையாகவே தெரிகிறது.
  
இதனால் பல கிசுகிசுக்கள் எழுந்தாலும் அடுத்ததாக தனது வாழ்க்கையில் சரியான நபரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் ரஜினி படத்தில் நடிகை இதைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளது இப்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தீபிகா படுகோன்.

பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானுடன் தீபிகா நிறைய படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஷாருக்கானுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த பதான் மற்றும் ஜவான் படங்களிலும் தீபிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ரஜினியின் கோச்சடையான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட்டில் கரண் ஜோஹரின் பிரபல நிகழ்ச்சியான காபி வித் கரண் சீசன் 8-ல் ரன்வீர் சிங்குடன் தீபிகா படுகோன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ரன்வீர் சிங் உடன் தான் உறவில் இருக்கும் போது இன்னும் நான்கு பேருடன் பலான உறவில் இருப்பதாக வெளிப்படையாக பேசி இருக்கிறார். மேலும் கணவர் பக்கத்தில் இருக்கும் போதே இப்படியா பேசுவது என பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதோடு மட்டுமல்லாமல் தீபிகா ஆரம்பத்தில் ரன்பீர் கபூர் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருந்தார். அப்போது ரன்பீர் தீபிகாவை பிரிந்த போது இவர் மீது தான் எல்லோரும் குற்றம் சுமத்தி இருந்தனர். ஆனால் இப்போது தீபிகா படுகோனின் பேட்டியால் அவர் மீது தான் தப்பு இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும் ரன்பீர் கபூர் உடன் இருக்கும்போதும் இவ்வாறு படுமோசமாக நடந்து கொண்டதால் அவரைப் பிரிந்து இருக்கக்கூடும் என பலரும் இப்போது விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள். தவளை தன் வாயால் கெடும் என்பது போல் தீபிகா படுகோன் அவரே ஏடாகூடமாக பேசி அவப்பெயரை சந்தித்து இருக்கிறார். 
 

Leave a Reply