• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காட்டில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளால் பரபரப்பு

இலங்கை

மாதம்பே, பனிரெண்டாவ வனப்பகுதியில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (26) பிற்பகல் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே குறித்த எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த எலும்புகள் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படாமல் உள்ள நிலையில், அவை சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடையதாக இருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை மாதம்பபே பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply