• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், பாடசாலைகளுக்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த தீர்மானித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 1.30க்கு நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த 24ம் திகதி ஏற்பாடு செய்ய ஆர்ப்பாட்ட பேரணி மீது, பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் நடாத்தியிருந்தனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
 

Leave a Reply