• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசா மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதல்

காசா நகர் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதலில் 50 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர்.
  
அத்துடன் காசா எல்லையில் நடந்த இசை நிகழ்ச்சியை குறி வைத்து தாக்கிய ஹமாஸ் படையினர் நூற்றுக்கணக்கானோரை கொன்றதுடன், வெளிநாட்டினர் மற்றும் இஸ்ரேலியர்கள் என நூற்றுக்கணக்கானோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.

இதையடுத்து சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து தங்களிடம் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்தவர்களில் இரண்டு அமெரிக்கப் பெண்கள், இரண்டு இஸ்ரேல் பெண்கள் என நான்கு பேரை ஹமாஸ் படையினர் விடுத்தனர்.

இந்நிலையில் ஹமாஸ் சமீபத்தில் தெரிவித்துள்ள தகவலில், காசா நகர் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதலில் 50 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இதே காரணத்தை குறிப்பிட்டு 21 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply