• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எதிர்பார்க்கப்படும் முறைமை மாற்றத்திற்காக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

இலங்கை

மக்கள் எதிர்பார்க்கும் முறைமை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு கடந்த காலத்தை மாற்றி புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அரசாங்கத்தில் மாற்றங்கள் மூலம் நிலையான கொள்கைகளை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக அடுத்த ஐந்தாண்டுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
 

Leave a Reply