• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலத்திரனியல் மயமாக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் கட்டண முறைமை

இலங்கை

அடுத்த வருடம் முதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஒன்லைன் முறையின் மூலம் பணம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல உள்ளூராட்சி மன்றங்கள் இது தொடர்பான வேலைத்திட்டத்தை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் வரி அறவீடு நடவடிக்கைகள் உள்ளிட்ட கொடுப்பனவுகளை மேற்கொள்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 341 உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் உரிய வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான அனைத்து வீதிகளின் வரைபடப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்வதற்கு நம்பிக்கையுள்ளதாக ஜானக வக்கம்புர தெரிவித்தார
 

Leave a Reply