• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீற்ற காலநிலையால் 7 பேர் உயிரிழப்பு-அனர்த்த முகாமைத்துவ நிலையம்

இலங்கை

நாட்டில் நிலவும் சீற்ற காலநிலை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 23 பேர் காயமடைந்த நிலையில் 13,352 குடும்பங்களைச் சேர்ந்த 54,440 பேர் பாதிக்கப்பட்டுள்ளர்.

இன்நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தின் 273 குடும்பங்களைச் சேர்ந்த 1, 041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கேகாலை மாவட்டத்தில் 278 குடும்பங்களைச் சேர்ந்த 1,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

மேலும் கொழும்பு மாவட்டத்தின் 70 குடும்பங்களைச் சேர்ந்த 293 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
 

Leave a Reply