• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாதைப் பிரச்சினையால் 3 மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

இலங்கை

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் அயல்வீட்டார்களுக்கு இடையில் நீண்ட காலமாக இருந்து வந்த பாதை முரண்பாட்டால் நேற்று மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
  
புன்னாலைக் கட்டுவன் பகுதியிலுள்ள இரு அயல் வீட்டுக்காரர்களுக்கு இடையில் பாதை பிரச்சனையொன்று நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.

இந்தப் பிரச்சனை இருதரப்பிற்கும் இடையில் கடும் முரண்பாட்டை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதில் ஒரு வீட்டுகார்ர் சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருக்கின்றார்.

இவ்வாறு வெளிநாட்டில் இருந்து வந்தவர் எனக் கூறப்படுவபர் ஒரு வன்முறைக் கும்பலொன்றை பயன்படுத்தி அயல் வீட்டுகார்ரின் இரண்டு மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரித்துள்ளார்.

இதனையடுத்து அங்குவந்த மற்ற வீட்டுக்கார்ர்கள் தீ வைத்து எரிக்க வந்தவர்களை துரத்தியுள்ளனர். இதன் போது தீ வைக்க வந்தவர்களின் மோட்டார் சைக்கில் ஒன்றினை மடக்கி பிடித்து அதனை இவர்களும் தீயிட்டு எரித்துள்ளனர்.

இதனால் இப் பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply