• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து 18 அகதிகள் பலி

அமெரிக்காவுக்கு, மெக்சிகோ நாட்டு வழியாக பலர் அகதிகளாக செல்ல முயற்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் தெற்கு மெக்சிகோவில் ஒரு பஸ்சில் வெனிசுலா, ஹைதி ஆகிய நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அகதிகள், அமெரிக்காவுக்கு சென்றனர். அப்போது ஒக்சாக்கா நெடுஞ்சாலையில் அந்த பஸ் விபத்தில் சிக்கியது.

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் மூன்று சிறுவர்கள் உள்பட 18 பேர் பலியானார்கள். 29 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.

மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குவது நடந்து வருகிறது. அந்த வாகனங்களை டிரைவர்கள் அதிவேகமாக ஓட்டி செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. 

Leave a Reply