• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத சிலர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு , வீட்டில் இருந்த உடைமைகள் மற்றும் வீட்டிற்கும் தீ வைத்து  தப்பி சென்றுள்ளனர்.

தென்மராட்சி மீசாலை மேற்கில் உள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை 01 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களுக்கு தீ வைத்து தப்பி சென்றுள்ளதுடன் வீட்டில் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐவர் இருந்த போதிலும் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் சுமார் 10 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply