• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடசாலைகளுக்கு விடுமுறை………..

இலங்கை

மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் விலி கமகே ஆகியோரின் தலைமையில் மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்று மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

மாத்தறை மாவட்டத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் கடந்த 05 மற்றும் 06ம் திகதிகளிலும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply