• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டில் எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச சட்ட ஆட்சிக்கும் நேரடி சவால்

இலங்கை

நாட்டில் எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச சட்ட ஆட்சிக்கும் நேரடி சவால் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
  
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தின் ஆட்சி என்பது அதிகார பகிர்வு,பொறுப்புக்கூறல் என்பன போன்ற மாற்றுக் கருத்துகள் கொண்ட விஷயமல்ல.

இங்கே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் உயிருக்கு அச்சுறுத்தல். நாட்டில் எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச சட்ட ஆட்சிக்கும் நேரடி சவால் எனவும் ஜனாதிபதி ரணில், உடன் நாடு திரும்பி பதிலளிக்க வேண்டும். அத்துடன் சட்டமாஅதிபர் சஞ்சய் ராஜரத்தினமும் பதிலளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply