• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பேருந்தில் நகைத்திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது

இலங்கை

பேருந்தொன்றில் நகைத் திருட்டில் ஈடுபட்ட  இரண்டு பெண்கள் உட்பட நால்வரை நேற்றைய தினம் வவுனியா பொலிஸார் கைது  செய்துள்ளனர்.

மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கிப்  பயணித்த பெண்ணொருவருக்குச் சொந்தமான 20 பவுன்  பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண், இது குறித்து வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், மகாறம்பைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த இரு பெண்கள் உட்பட நால்வரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் திருடப்பட்டதாகக்  கூறப்பட்ட 20 பவுண் நகை, முச்சக்கர வண்டி மற்றும் பட்டா ரக வாகனம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளின்  பின்னர்  குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply