• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாகர்கோவில் பகுதியில் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டும்

இலங்கை

வடமராட்சி, மருதங்கேணியில் இடம்பெற்றுவரும்  சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் காவலரணொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இன்று வரை அதற்காக எந்தவித  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இன்று  இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மருதங்கேணி பிரதேச செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது குறித்த பகுதியில் ”இரவு பகலாக தொடர்ச்சியாக மணல் அகழ்வுகள்  இடம்பெற்று வருவதாகவும்,  கூட்டங்களில் மாத்திரமே இந்த விடயம் குறித்து  பேசப்படுவதாகவும், ஆனால் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை  எனவும் அவர்  விசனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply