• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரணில் விரைவில் விரட்டப்படுவார்

இலங்கை

தற்போதைய ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்க மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்ளாமல் நாட்டையும் நாட்டு மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக இவர் தோல்வியை சந்திப்பார் எனவும் மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளுக்கு மக்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தோல்வியை சந்திக்கும் அச்சத்திலேயே தேர்தலை பிற்போடும் செயற்பாடுகளை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply