• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திலீபனின் நினைவேந்தல் ஊர்தி மன்னாரை வந்தடைந்தது

இலங்கை

தியாக தீபம் திலீபனின் 36 வது  நினைவு தினத்தை, முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டுவரும் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனியானது நேற்றைய தினம் மன்னாரை வந்தடைந்தது.

இதன் போது பொதுமக்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபனின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து குறித்த பவனி பள்ளிமுனை,பனங்கட்டுக்கொட்டு,சாந்திபுரம்,எழுத்தூர் மற்றும் தாழ்வுபாடு ஆகிய கிராமங்களை நோக்கி  மக்களின் அஞ்சலிக்காகச் சென்றுள்ளது.
 

Leave a Reply