• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதியை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இது தொடர்பான அறிவிப்பு பரீட்சை ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், உயர்தரப் பரீட்சைக்கான திகதியை பரீட்சை ஆணையாளர் அடுத்த வாரம் அறிவிப்பார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மைய நாட்களில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அவர்களின் அந்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply