• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அவிசாவளையில் துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு

இலங்கை

அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

நேற்று (புதன்கிழமை) இரவு இஹல தல்துவ-குருபஸ்கொட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றதோடு சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Leave a Reply