• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் திடீரெனப் பற்றியெரிந்த பேருந்து

இலங்கை

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை, சாவல்காட்டு பகுதியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று நேற்றிரவு  திடீரெனத் தீக்கிரையாகியுள்ளது.

பேருந்தின்  உரிமையாளர் தனது வீட்டின் முன்பாக பேருந்தினை நிறுத்தி வைத்திருந்த நிலையிலலேயே இன்று  காலை அதிகாலை பேருந்து தீ பிடித்து எரிவதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து அவர் தீயை அணைக்க முற்பட்ட போதிலும் பேருந்து முற்றாக தீக்கிரையாகியுள்ளது. இந்நிலையில் குறித்த பேருந்து மின் ஒழுக்கு போன்ற காரணங்களால் தீ பிடித்ததா ? அல்லது விஷமிகளின் நாசகார வேலையா? என்பது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply