• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவுகளை எடுக்க வேண்டும்-ஜோ பைடன்

இலங்கை

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உலக நாடுகள் உக்ரைனுக்கு பக்கபலமாக நிற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே ஜோ பைடன் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் மோதலின் போது மனிதாபிமான உதவிகளை ஒழுங்கமைப்பதில் ஐ.நா தலைமை வகித்தாலும், அது போரில் மத்தியஸ்தராக செயல்படவில்லை என்றும் இப்போது நாம் எடுக்கும் முடிவுகள் பல தசாப்தங்களாக நமது எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply