• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் இரண்டு நாட்கள் கவனயீர்ப்பு போராட்டம் 

இலங்கை

யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் இரண்டு நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நாளை மறுதினமும் வியாழக்கிழமையும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் வி.தர்சன் அறிவித்துள்ளார்.

மருந்து தட்டுப்பாடு, வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சுகாதார கட்டமைப்பை பாதிக்கும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதனை தடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரியே இரு தினங்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply