• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குருந்தூர் மலை விவகாரம் – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிணை

இலங்கை

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் பௌத்த வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

குருந்தூர் மலையில் பௌத்த துறவிகளின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக நீதிமன்ற இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

வழிபாடுகளுக்காக சென்றவர்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச் சாட்டுக்களை முன்வைத்து சில பிக்குகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். குறித்தமுறைப்பாட்டுக்கமைவாக வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைவாக குறித்த வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முல்லைத்தீவு நீதவான் நீதிபதி வு.சரவணராஜா இவர்களை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிட்டார்.
 

Leave a Reply