• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷ்யா மற்றும் வடகொரியா மீது  கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் -அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கை

ரஷ்யா, வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால் இரு நாடுகள் மீதும் கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வடகொரிய ஜனாதிபதி  கிம் ஜொங் உன் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வடகொரியா – ரஷ்யா இடையே வளர்ந்து வரும் உறவு கவலை அளிப்பதாகவும், புடின் மற்றும் கிம்மின் சந்திப்பை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்  துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கருத்துத் தெரிவிக்கையில்” உக்ரேன் உடனான போரில், பல்லாயிரக்கணக்கான வீரர்களையும், கோடிக்கணக்கான டொலர் மதிப்பிலான பணத்தையும் ரஷ்யா இழந்துள்ளது. எனவே வடகொரிய ஜனாதிபதியிடம் ரஷ்யா  உதவிக் கரம் நீட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளது” என விமர்சித்துள்ளார்.

Leave a Reply