• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சனல் 4 சமீபத்தில் அம்பலப்படுத்திய அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் தன் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காடிட்டனர்.

இருப்பினும் சனல் 4 ஆவணப்படம் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் நடந்ததற்கும் உணர்ந்ததற்கு முற்றிலும் மாறுபாடு உள்ளமையினால் இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply