• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவிஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் நீச்சல் விரும்பிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சுவிட்சர்லாந்தில் ஓடும் Rhone நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், தண்ணீர் வேகமாக ஓடுவதாகவும் நீந்தச் செல்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை குளிர்ச்சியாக இருப்பதால் நீந்த ச்செல்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்றாலும், குளிரையும் மீறி நீந்தச் செல்வோரும் இருக்கிறார்கள்.

சமீபத்தில் பெய்த மழையால் ஏரிகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளதாலும், அணைகளில் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதாலும், தண்ணீரின் அளவைக் குறைப்பதற்காக அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

விநாடிக்கு 500 கியூபிக் மீற்றர் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஆகவே, நதியின் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளதுடன், தண்ணீர் வேகமாகவும் ஓடுகிறது. எனவேதான் நீந்தச் செல்வோருக்கு அது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply