• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முல்லைத்தீவில் வெகு சிறப்பாக நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டி

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் (22)  வடமாகாணத்தைச் சேர்ந்த  பாடசாலை மாணவர்களுக்கான  மரதன் ஓட்டப் போட்டியொன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

காலை 7.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த இம்மரதன் ஓட்டப்போட்டியானது  குமுழமுனை மகாவித்தியாலய முன்றலில் நிறைவடைந்தது. இவ் ஓட்டப் போட்டியில் 200 மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.

கனடாவில் வசிக்கும் முன்னாள் குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் மரதன் ஓட்ட வீரரான  கந்தசாமி பத்மநாதன் என்பவரே இப்போட்டிக்கான  முழுமையான நிதியுதவியினை வழங்கியுள்ளார்.

இதில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கு கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் முல்லை வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர், நிர்வாகப் பணிப்பாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
 

Leave a Reply