• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாடாளுமன்றில் போராட்டம்

இலங்கை

வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் இன்று காலை நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், சிறிதரன், உதய குமார், வேலுகுமார், கோவிந்தம் கருணாகரம் ஆகியோரே போராட்டத்தினுள் ஈடுபட்டனர்.

மாத்தளை, எல்கடுவ பிரதேசத்தில் இருந்து மூன்று தோட்ட குடும்பங்கள் வௌியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் இடம்பெற்றது.

வீடொன்றில் வசித்து வந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரை பலவந்தமாக வெளியேற்றி, வீட்டை இடித்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக தோட்ட உதவி முகாமையாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அண்மையில் அவருக்கும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply