• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அன்னமலை பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் சிரமதானம் முன்னெடுப்பு

இலங்கை

கல்முனையில் உள்ள, அன்னமலை பிரதேச  வைத்தியசாலை வளாகத்தில்  “சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்”  எனும் தொனிப் பொருளில்  சிரமதான நிகழ்வு ஒன்று  நேற்றைய தினம் ( 20)  நடைபெற்றது.

157 வருட பொலிஸ் தினத்தை முன்னிட்டு  சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  டீ.எம்.எஸ்.கே தசநாயக்க ஆலோசனையின் பிரகாரம்  இச்சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் இச்சிரமதானப் பணியில் சவளக்கடை பொலிஸ் உத்தியோகத்தர்கள். சமூர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டு தத்தமது  பங்களிப்புகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply