• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு

இலங்கை

கிளிநொச்சியில் கிணறொன்றிலிருந்து வெடிபொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் பகுதியில் நேற்று கிணறு சுத்தம் செய்யும் வேளையில் குறித்த ஆயுதங்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டிருந்தது.

இதன்போது 60 தோட்டாக்கள் சாஜர்கள் மற்றும் பழைய இலத்திரனியல் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply