• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காணி விடுவிப்பு தொடர்பான கூட்டத்தை புறக்கணித்த தழிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கை

வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் அவற்றை விடுவிப்பது தொடர்பிலான கூட்டம் இடம்பெற்றது.

குறித்த கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தவைமையில் இன்று இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி கையகப் படுத்தப்பட்ட காணிகள் தொடர்பிலும் அவை விடுவிப்பு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

காணி விடுவிப்பு தொடர்பில் உயர் மட்ட அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை ஏனைவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் குறித்த கூட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் காணி உத்தியோகஸ்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மற்றும் முன்னால் நகரசபை பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கூட்டத்திற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

இவ்வாறான கூட்டங்களுக்கு; உரிய நேரத்திலும் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை எனவும் கூட்டங்களில் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரச தரப்பு பிரதிநிதிகள் வாய்ப்பு வழங்குவதில்லை என்ற அடிப்படையிலேயே தாங்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளதாக கூட்டத்தில் கலந்துக் கொள்ளாத தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply