• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழர்களை பாதிக்கும் செயற்பாடுகளையே தொல்லியல் திணைக்களங்கள் முன்னெடுத்துள்ளன

இலங்கை

தற்போதுள்ள அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்ப்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் திணைக்களம், வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களத்தின் சில முறையற்ற செயற்பாடுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வனவளப் பாதுகாப்பு ,வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மாறாகவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் முன்னெடுக்கப்படுக்கின்ற எவ்வகையான முயற்சிகளும் வெற்றியளிக்காது எனவும் தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்த உதவாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Leave a Reply