• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடிமை வாழ்க்கை வேண்டாம் – விடிவை பெற்று தாருங்கள்

இலங்கை

மலையக அரசியல்வாதிகளுக்கு குருநாகல் – பத்தலகொட மக்கள் கோரிக்கை கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.

இன்றும் நாங்கள் லயன் குடியிருப்புகளில் அடிமைகளாகவே வாழ்ந்து வருகின்றோம் எனவும், இந்த அவல நிலை தங்களின் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் எங்களின் வாழ்க்கை கனவாக மட்டுமே உள்ள நிலையில், விடிவை பெற்றுத் தருமாறும் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

பத்தலகொட மக்களின் உருக்கமான கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply