• Welcome to TamilsGuide
செய்திகள் 1

11 ஆம் வகுப்பு மாணவனை கூரிய ஆயதத்தால் தாக்கிய 12 ஆம் வகுப்பு மாணவன்

இலங்கை

காலி – கரந்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவரொருவர் அதே பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவனை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், 12ஆம் தரத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளானவர் 11ஆம் தரத்தைச் சேர்ந்த மாணவர் எனவும் அவர் தற்போது எல்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a Reply