• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஏக்கலையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

இலங்கை

ஏக்கலை  பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு  சுமார் 7 மணியளவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தினையடுத்து  சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர்  தீயை முற்றுமுழுதாகக் கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தில் பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்ட போதிலும் உயிர் சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜாஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply