• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி

இலங்கை

யாழ் -தெல்லிப்பளை, ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான  பாதை அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும்,  இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பாதுகாப்பு பிரிவினரிடம் நேற்று தெரிவித்தார்.

ஒட்டகப்புலம் பகுதிக்கு  விஜயம் செய்தஆளுநர் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டத்துடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார். யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி ) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர். இதன் போதே ஆளுனர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply