• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் விழா ஆரம்பம்

இலங்கை

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் விழா சற்று நேரத்திற்கு முன் தடைகள், அச்சுறுத்தல்களை தாண்டி ஆரம்பமாகியுள்ளது.

குருந்தூர் மலையில் இன்று (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் சுமார் ஐந்து பேருந்துகளில் நூற்றுக்கணக்கான பெரும்பான்மையின் மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளில், ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆலய சூழலில் பொங்கல் நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
 

Leave a Reply