• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உருக்குலைந்த ஹவாய்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது

அமெரிக்காவின் ஹவாய் தீவில் பரவிய  தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனால் பெரும்பாலான வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ள நிலையில் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தீயில் கருகியுள்ளன.

குறித்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ள நிலையில்  1300-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்த  ஹவாய் தீவு இன்று காட்டுத்தீயினால் உருக்குலைந்துபோயுள்ளது.
 

Leave a Reply