• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் திரையுலகின் கலங்கரைவிளக்கம் திரு.பஞ்சு அருணாசலம்...!

சினிமா

மணமகளே மருமகளே வா வா - உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா..!
-இன்றளவும்கல்யாண வீடுகளில் ஒலிக்கும் சாரதாபடத்தில் இந்த பாடலைக எழுதியவர் பஞ்சுஅருணாசலம் அவர்கள்..!
கண்மணியே காதல் என்பது கற்பனையோ, 
காவியமோ, கண்வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்மா..!
சூப்பர்ஸ்டாரின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இந்த பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம் அவர்கள்..!
அன்னக்கிளி உன்னை தேடுதே
ஆறு மாசம் ஒரு வருசம்
ஆவரம்பூ மேனி வாடுதே..!

இன்றும் இனிக்கும் இசைஞானியின் முதல் பட அன்னக்கிளி பாடல்கள் அனைத்தும் எழுதியவர் பஞ்சுஅருணாசலம் அவர்கள்..!
மேலும்கலங்கரை விளக்கம் படத்தில் அவர் எழுதிய, பொன்னெழில் பூத்தது புதுவாழ்வில்...! காலத்தால் அழியாத பாடல்..!
பஞ்சுஅருணாசலம் பணியாற்றிய சூப்பர்ஸ்டார் ரஜினி படங்கள்..!
ஆறிலிருந்து அறுபதுவரை,புவனா ஒரு கேள்விக்குறி, ப்ரியா,முரட்டுக்காளை.எங்கேயோ கேட்ட குரல்,பாயும் புலி, அடுத்த வாரிசு, தம்பிக்கு எந்த ஊரு, ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, தர்மதுரை,ராஜா சின்ன ரோஜா, வீரா,குரு சிஷ்யன்..!
பஞ்சுஅருணாசலம் பணியாற்றிய கலைஞானி கமல் படங்கள்..!
உல்லாசப் பறவைகள், எல்லாம் இன்ப மயம்,
சகலகலாவல்லவன்,கல்யாணராமன், ஜப்பானில் கல்யாணராமன், 
மீண்டும் கோகிலா, தூங்காதே தம்பி துhங்காதே,சிங்காரவேலன், உயர்ந்த உள்ளம்,அபூர்வ சகோதரர்கள்,மைக்கேல் மதன காமராஜன்..!
இளையராஜாவை அறிமுகம் செய்தார். அவரை மட்டுமின்றி அவரது இரு மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா இருவரையும் தான் தயாரித்த படங்களில் இசையமைப்பாளர்களாக அறிமுகப்படுத்தினார்...! அறுபதாண்டுகளாகத் தமிழ்த் திரையுலகுக்காக உழைத்தவர் பஞ்சுஅருணாசலம்..!இதுவரை 99 படங்களுக்குக் கதை வசனகர்த்தாகப் பணியாற்றியிருக்கிறார்...!நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளவர் பஞ்சு அருணாசலம்..! இவர் கதை வசனம் எழுதிய தயாரித்த எங்கேயோ கேட்டக் குரல் படத்திற்கு தமிழக அரசின் சிறந்தப் படத்திற்கான முதல் பரிசும், தங்கப் பதக்கமும் கிடைத்தது. அதே போல பாண்டியன் படத்திற்காக சிறந்த கதை ஆசிரியருக்கான விருது பெற்றார் இவர். தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளவர் பஞ்சு அருணாசலம்..!
ரஜினி, கமல் என்ற இரு ஜாம்பவான்களின் பலவெற்றிபடங்களுக்கு பின்னால் பஞ்சு அருணாசலம் என்ற மனிதர் இருக்கிறார்...!
பஞ்சு அருணாசலம் ஓர் எழுத்தாளர், கவிஞர், ரசிகனின் மனமறிந்த தயாரிப் பாளர். இப்படி எல்லாமுமாக வாழ்ந்த  அவர் திரையுலகிற்கே ஒரு கலங்கரை விளக்கமாக என்றும் வானில் இருந்து வழி காட்டுவார்..!
அவர் புகழ் அழியா புகழ்..!

#ஈசன்_எழில்விழியன்

Leave a Reply