சுந்தர கைலாசம் திறப்பு விழா!
சினிமா
கீரிமலை சிவபூமி முதியோர் ஆச்சிரமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சுந்தர கைலாசம் எனும் புதிய கட்டட தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது.
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில்,
பிரதம விருந்தினராக கலிபோர்னியாவில் இருந்து வருகை தந்த வைத்திய நிபுணர் க.சண்முகசுந்தரம் அவர்களும் அவரது துணைவியாரும் கலந்து சிறப்பித்தனர்.
சரித்திர புகழ் பெற்ற கீரிமலையில் சுத்தமான ஆன்மீக காற்று வீசும் நல்ல இனிமையான இயற்கை சூழலில்,
பல முதியோர்களுக்கு உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆறுதல் அளித்து வருகின்றது கீரிமலை சிவபூமி முதியோர் இல்லம்.
இவ் மடத்தில் நவீன வசதிகளுடன் பல அறைகள் கட்டப்பட்டுள்ளன அத்துடன் நாச்சார் முற்றம், ஆலயம், நூலகம் மற்றும் அழகிய பூந்தோட்டம் என்பன அமைக்கப்பட்டுள்ளது.
சிவபூமி அறக்கட்ளை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு மனிதநேய அறப்பணிகளை ஆற்றி வருகின்றது.
அதன் ஒரு அங்கமாக கீரிமலையில் அமைந்துள்ள இவ் முதியோர் இல்லம் தற்பொழுது மேலும் பல வசதிகளுடன் கூடிய பல அறைகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவ் முதியோர் இல்லத்தினை அமைப்பதற்கு மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவனும் அமெரிக்காவில் வைத்திய நிபுணராக கடமையாற்றும் க.சண்முகசுந்தரம் அவர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களும் பெருமளவு பங்களிப்பு நல்கியுள்ளனர்.